தமிழ்நாடு

தமிழ் ராக்கர்ஸை அரசாலும் ஒழிக்க முடியாது.. கடம்பூர் ராஜூ அதிர்ச்சி!

Published

on

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தமிழக அரசு மட்டும் தனியாளாக முடக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழ் ராக்கர்ஸ் குறித்து விளக்கம் அளித்தார்.

அதில், தமிழ் திரையுலகில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை நாங்கள் மட்டும் தனியாக ஒழிக்க முடியாது. தமிழக அரசால் இதில் தனியாக நடவடிக்கை எடுக்க முடியாது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இதில் களமிறங்கினால் மட்டுமே முடியும். அப்போதுதான் தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை மொத்தமாக முடக்க முடியும்.

தமிழக அரசு திருட்டு விசிடிக்கு எதிராக தனிச்சட்டம் ஏற்றியுள்ளது. இந்த சட்டம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதனால் தற்போது திருட்டு விசிடி வெகுவாக குறைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version