தமிழ்நாடு
நாங்க தயார்.. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த ரெடி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி!
![3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/3.jpg)
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணைய பணியாளர்கள் ஆய்வு பணிகளை தொடங்கிவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் வாக்குப்பதிவு மையங்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதுகுறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று ஆலோசனை செய்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி, வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.