Connect with us

இந்தியா

சாலையை உடைத்து கொண்டு வெளியேறிய தண்ணீர்.. பைப் உடைப்பால் ஏற்பட்ட விபரீதம்..!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் வெடித்ததால் சாலை திடீரென விரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சாலைக்கு அட்யில் தான் எண்ணெய் மற்றும் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த குழாய்கள் அவ்வப்போது வெடித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் பாதிக்கப்பட்டிருந்த குழாய் திடீரென வெடித்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததோடு அந்த சாலை கடும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இது குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சாலை அமைதியாக இருக்கும் நிலையில் அந்த வழியாக ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது தரைக்கு அடியில் பாதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் மிகப்பெரிய சத்தத்துடன் பலமாக வெடிக்கிறது. அந்த சாலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சரிந்து விழுகின்றன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலை வெடிப்பின் போது சரியாக கடந்து சென்றதால் அவர் தூக்கி வீசப்படுகிறார். அவர் சிறிய அளவில் காயமடைந்ததாகவும் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை காப்பாற்றியதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சில மைல்கள் தூரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் குழாய் வெடிப்பிலிருந்து வெளியேறிய தண்ணீரின் அழுத்தம் காரணமாக சாலை பெயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தற்போது குழாயை சரி செய்யும் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலத்தடியில் பாதிக்கப்பட்ட குழாய் வெடித்ததால் முதலில் பூகம்பம் என்று நான் நினைத்து விட்டேன் என்றும் அதிலிருந்து வந்த தண்ணீரை பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம் என்றும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!