இந்தியா

இடிந்து விழுந்த 40 வருட தண்ணீர் தொட்டி – அதிர்ச்சி வீடியோ

Published

on

குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மூலம் 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தொட்டி சேதமடைந்து வருவதாகவும், இதை சீரமைக்க வேண்டும் எனக்கூறி பலமுறை அதிகாரிளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த உயர்நிலை நீர் தேக்க தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்து சுக்குநூறாக உடைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் கோரிக்கை வைத்தபோது அந்த தொட்டியை சீரமைத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version