சினிமா செய்திகள்

தண்ணீர் பஞ்சம்; விஞ்ஞானிகளுக்கு சீனுராமசாமி அறைகூவல்!

Published

on

நீர்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை வெயில் காரணமாக ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில், ”இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளே உங்களுக்கு ஒரு அறைகூவல் இயற்கை எதிர்வினையாற்றுகிறது தொடர்ந்து மழையில்லை அழுதால்தான் தண்ணீரே பார்க்கமுடிக்கிறது இதை சீர் செய்யுங்கள் அரபுநாடுகளை போல வானத்தில் மேகத்தை தூவி மழையை கொண்டு வாருங்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காக்கவும்” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. மேலும், தண்ணீர் பஞ்சம் சென்னையை பாடாய் படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்படியொரு கோரிக்கையை விஞ்ஞானிகளை நோக்கி சீனுராமசாமி வைத்துள்ளார்.

அவரது இந்த கோரிக்கையை பார்த்த நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ் அவரது ட்வீட்டுக்கு லைக் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version