விளையாட்டு
‘நா பாத்துக்குறேன் மச்சான்…’- இந்திய அணியின் நெருக்கடியைக் குறைத்த வாஷிங்டன் சுந்தர்!
இந்திய அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் நம் அணிக்கு இருந்த மொத்த நெருக்கடியையும் குறைத்தவரே வாஷிங்டன் சுந்தர் தான் என மற்றொரு வீரரான ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சார்பில் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கடைசி போட்டியில் தான் வாசிங்டன் சுந்தர் தனது சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தைக் கொடுத்தார். முதல் இன்னிங்ஸ்-ல் அதள பாதாளத்தில் தவித்த இந்திய அணியை இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் அரை சதம் அடித்து மீட்டவரே வாஷிங்டன் சுந்தர் தான்.
கடைசி நேர நெருக்கடியில் இருந்த அணியை மீட்ட வாஷிங்டன் சுந்தர் குறித்து சக வீரரான ரிஷப் பண்ட் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில், “ஆட்டம் இழந்துவிடுவோமோ என அணி பயந்து கொண்டிருந்த போது மச்சான் நீ நின்னு ஆடுடா, நான் இறங்கி டார்க்கெட்டை அடிக்கிறேன் என உற்சாகப் படுத்திவிட்டு விளாசியதே வாஷிங்டன் சுந்தர் தான்” எனக் கூறியுள்ளார்.