சினிமா செய்திகள்

இயக்குனர் ஆர்கே செல்வமணிக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

Published

on

இயக்குனர் ஆர் கே செல்வமணி உள்பட இருவருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் பிரமுகர் அருள் அன்பரசு ஆகிய இருவரும் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தனர் .

அப்போது சினிமா பைனான்சியர் மோத்ரா என்பவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து சினிமா பைனான்சியர் மோத்ரா ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் பிரமுகர் அருள் அன்பரசு ஆகிய இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார் .

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவரின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்றும் அவர்களுடைய வழக்கறிஞர்களும் கூட ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

seithichurul

Trending

Exit mobile version