வணிகம்

2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வால்மார்ட்.. சென்னை இளைஞர்களுக்கு ஜாக்பாட்!

Published

on

வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல், சென்னையில் புதியதாக வர்த்தகத்தைத் தொடங்க முடிவு செய்துள்ள வால்மார்ட், முதற்கட்டமாக 800 ஊழியர்களை பணிக்கு எடுக்கிறது.

அடுத்த இரண்டு வருடத்தில் சென்னையில் மட்டும் 2,000 ஊழியர்கள் பணிபுரியும் அளவில் வர்த்தகத்தை மேம்படுத்த வால்மார்ட் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version