தமிழ்நாடு

தமிழக வாக்காளர் பட்டியல் ரெடி.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

Published

on

சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி வருகிறதோ அதேபோல்தான் தேர்தல் ஆணையமும் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதற்காக தேர்தல் ஆணையம் நிறைய தயாரிப்புகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனை தமிழக டிஜிபி, காவல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் நடந்தது. இந்த ஆலோசனைக்கு பின் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், லோக்சபா தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. நாளை மாலை 4 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version