வணிகம்

3 மாதத்தில் ரூ.50,922 கோடி நட்டம் அடைந்த வோடாஃபோன் ஐடியா சோகம்!

Published

on

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதில் ஹட்ச் நிறுவனத்தை வங்கிய போது அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு வழங்கிய 25,678 கோடி ரூபாயும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தொடர வேண்டுமா என்ற முடிவை அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கு அளிக்க போகும் கட்டண விலக்குகளை பொறுத்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 23,045 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் இரண்டு நிறுவனங்களிலும் ஊழியர்களின் பணிநீக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version