தமிழ்நாடு

வ.உ.சியின் கொள்ளுப்பேத்திக்கு கொரோனா: சிறப்பு சிகிச்சை அளிக்க அமைச்சர் உத்தரவு!

Published

on

வ.உ.சியின் கொள்ளுப்பேத்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும் செக்கிழுத்த செம்மல் என்று கூறப்படுபவருமான வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி மேக்டலின். இவர் மதுரையில் வசித்து வருகிறார் என்பதும் இவர் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வஉ சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி மேக்டலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த வ.உ.சியின் கொள்ளுப்பேத்திக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் நேற்று வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version