தமிழ்நாடு
வெற்றி பெற்ற மறுநாளே கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்க கவுன்சிலர்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட 169 பேர்கள் போட்டியிட்டனர் என்பதும் அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக கவுன்சிலர்களை பெற்றது விஜய் மக்கள் இயக்கத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்கள் அனைவரும் வெற்றி பெற்ற உடனே தங்கள் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் மக்களின் கோரிக்கையை கேட்டு அந்த கோரிக்கையை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வெற்றி பெற்ற மறுநாளே பொது மக்களின் முக்கிய கோரிக்கை ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டம் சேர்ந்த தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.
அவர் அந்த பகுதி மக்களிடம் சென்று குறை கேட்டபோது அந்த பகுதியில் திருட்டு பயம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து உடனடியாக அவர் சிசிடிவி மாட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் வெற்றி பெற்ற மறுநாளே மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.