டிவி

சித்ரா கடைசியாக தொலைபேசியில் பேசியது என்ன? – சிக்கிய ஆடியோ

Published

on

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலையில் மர்மம் இருந்த காரணத்தினால், காவல் துறையும் ஆர்.டி.ஓ தரப்பும் அது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது போலீஸ். அவரிடம் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருவதால், வழக்குத் தொடர்பாக அடுத்தடுத்த பகீர் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறதாம். குறிப்பாக சித்ரா, தன் போனிலிருந்து கடைசியாக யாரிடம் பேசினார் மற்றும் என்ன பேசினார் என்பது குறித்து விசாரணை செய்ய முடிவெடுத்தது காவல் துறை. ஆனால், சித்ராவின் போனிலிருந்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டதால், சைபர் கிரைம் உதவியுடன் அதை மீட்க நடவடிக்கை எடுத்தது போலீஸ்.

மீட்ட தகவல்களின் அடிப்படையில் சித்ரா கடைசியாக தன் மாமனார், அதாவது ஹேம்நாத்தின் அப்பாவுக்கு போன் செய்து, ‘கணவர் ஹேம்நாத் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்’ என்று சொன்னதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கடுத்து சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையில் நடந்த வாக்குவாதம், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக ஹேம்நாத்துக்கு எதிராக தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும், இதுவரை போலீஸ் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

Trending

Exit mobile version