டிவி

அச்சு அசலாக சித்ரா போலவே இருக்கும் இவர்தான் இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸின்’ முல்லையா?

Published

on

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்த சித்ரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் மர்மம் நிலவிவருவதால், அது குறித்து தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சித்ரா நடித்து வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் அவருக்கு பதிலாக, அவரைப் போலவே தோற்றமுடைய கீர்த்தனா திவாகர் என்பவர் நடிக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

கீர்த்தனா, சித்ரா இறந்ததிலிருந்து அவரைப் போலவே மேக்கப் செய்து பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக முல்லை கேரக்டரில் சித்ரா தோன்றுவது போலவே அவரின் படங்கள் இருந்தன. இதனால் கீர்த்தனாகவுக்கும் முல்லையாக வலம்வர வேண்டும் என்கிற ஆசை இருந்ததாக பரபரக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து அவர், ‘நான் கடந்த சில ஆண்டுகளாக எங்கு சென்றாலும், நீங்கள் சித்ரா போல இருக்கிறீர்கள், முல்லை போலவே இருக்கிறீர்கள் என்று பலர் கமென்ட் சொல்வார்கள். உண்மையாக அது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கென்று தனித்த அடையாளம் இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், இப்போது அப்படியான கமென்ட் வரும்போது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. காரணம், அப்படி சொல்வதன் மூலம் ஒருவரை என்னால் மகிழ்விக்க முடிகிறது.

சித்ரா, இறந்த தருணத்திலிருந்து எனக்குத் தொடர்ச்சியாக மெஸேஜ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை உருவாக்கி வருபவர்களை தொடர்பு கொண்டு, உன்னைப் பற்றி தெரியப்படுத்து. அதன் மூலம் உனக்கு முல்லை ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரை முல்லை அல்லது சித்துவாக இன்னொருவரால் இருக்க முடியாது. இந்நேரம் யார் அந்த ரோலில் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்து முடிவெடுத்திருப்பார்கள். அவரைப் போன்று புகைப்படங்கள் எடுத்ததும் கூட சித்ராவை மதிக்கும் நோக்கில்தான். அவருக்காக அன்பு செய்யும் நோக்கில்தான். அனைவரும் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version