டிவி
’விஜே சித்ரா’ கணவர் ஹேம்நாத் மீது புதியதொரு பண மோசடி வழக்கு..!
மறைந்த விஜே மற்றும் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்போது சித்ரா மரண வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.
சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் தற்போது சிறைத் தண்டைனையை அனுபவித்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் ஹேம்நாத் மீது புதிதாக ஒரு பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹேம்நாத் மருத்துவ படிப்புக்காக கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் லட்சம், கோடி என பணம் வசூல் செய்துள்ளார். ஹேம்நாத் மூலம் ஏமாந்த மாணவர்களின் பெற்றோர் தற்போது இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் ஹேம்நாத் மீது புதிதாக ஒரு பண மோசடி வழக்கும் பாய்ந்துள்ளது. புகார்களின் அடிப்படையில் இதுவரையில் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பண மோசடி செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய மோசடி வழக்கை சிறையில் இருந்தே கொண்டே தான் ஹேம்நாத் அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.