டிவி

ஹேம்நாத் சந்தேகத்தால் மட்டுமே விஜே சித்ரா தற்கொலை… உறுதியாய்ச் சொல்லும் காவல் ஆய்வாளர்

Published

on

ஹேம்நாத்தின் சந்தேகத்தால் மட்டுமே விஜே சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

விஜே சித்ரா மற்றும் அவரது கணவர் ஹேம்நாத் இடையே நடந்த மோதல்கள் குறித்தும் அதற்குத் தன்னிடம் உள்ள ஆடியோ ஆதரத்தையும் சமார்ப்பித்தார் ஹேம்நாத் நண்பர் ரோகித். ரோகித் கூறுகையில், ‘நானும் என் மனைவியும் சித்ரா- ஹேமந்த் உடன் தங்கியிருந்த போது பல சண்டைகள் நடந்துள்ளது. அப்போது எல்லாம் ரத்தம் வரும் வரை எல்லாம் ஹேமந்த் அடித்துள்ளார். நானும் என் மனைவியும் தான் தடுத்து விலக்கிவிடுவோம். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் கூட என்னிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினான். அந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன்’ என்றுள்ளார்.

இத்தகைய சூழலில் சித்ரா தற்கொலை நாள் அன்று நடந்த வாக்குவாதம் குறித்து போலீஸ் ஆய்வாளர் கூறுகையில், “தற்கொலை செய்து கொண்ட நாளிலும் சித்ரா உடன் ஹேம்நாத் சண்டை இட்டுள்ளார். எனக்கு சத்தியம் செய்து கொடுத்த பின்னரும் வேறு யாருடன் நடனம் ஆடிவிட்டு வந்தாய் எனக் கேட்டு சண்டையிட்டுள்ளார். ஹேம்நாத்தின் சந்தேகத்தின் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்” என்றார்.

seithichurul

Trending

Exit mobile version