சினிமா செய்திகள்
ரசிகன் உயிரை பலி வாங்கிய விஸ்வாசம் கட்-அவுட்
கட்-அவுட் காலாசாரம் எப்போது தான் முடியுமோ என்று தெரியவில்லை. உயர்நீதிமன்றம் பலமுறை கட்-அவுட்கள் பேனர்களுக்கு தடை விதித்தாலும், அரசியல்வாதிகளும் கேட்பதில்லை ரசிகர்களும் கேட்பதில்லை.
நேற்று வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களுக்கு போட்டிபோட்டு ரசிகர்கள் கட்-அவுட், பேனர்கள், பாலாபிஷேகம், சரவெடி என களேபரம் செய்தனர்.
மேலும், பல தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஸ்க்ரீனை கிழிப்பது, உட்காரும் விலையுயர்ந்த நாற்காலி சீட்டை கிழிப்பது, கத்திக் குத்து என அராஜகம் செய்தனர்.
இந்நிலையில், திருக்கோவிலூரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் 40 அடி உயர பெரிய கட்டவுட் சரிந்து விழுந்ததில், பாலாபிஷேகம் செய்த 6 ரசிகர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், ஒரு ரசிகன் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிய நட்சத்திரங்கள் இப்போதாவது வாய் திறந்து தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவார்களா? இல்லை தியேட்டர்களில் கட்-அவுட் வைக்க நிரந்தர தடையை நீதிமன்றம் விதிக்குமா என பார்ப்போம்.