சினிமா செய்திகள்

செய்தியாளர் சந்திப்பில் அனைவருக்கும் நன்றி கூறிய விவேக் மனைவி!

Published

on

நடிகர் விவேக் அவர்களுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருடைய உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் விவேக்கின் மனைவி அருள்செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவருக்கு மத்திய மாநில அரசுகள் கொடுத்த கௌரவத்திற்கு நன்றி என்றும் குறிப்பாக மாநில அரசு, அரசு மரியாதையுடன் எனது கணவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தமைக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

மேலும் காவல்துறை சகோதரர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பாதுகாப்பு அளித்தார்கள் என்றும் அவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்த அவர், நேற்றைய எனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version