சினிமா செய்திகள்

யோகிபாபுவுக்கு நன்றி தெரிவித்து டுவிட் போட்ட விவேக் மகள்: காரணம் இதுதான்!

Published

on

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு மறைந்த நடிகர் விவேக்கின் மகள் டுவிட்டர் பக்கத்தில் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார் என்பது தெரிந்ததே. அவர் தடுப்பூசி போட்ட ஒரு சில நாட்களில் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சிமா விருது வழங்கும் விழாவில் விவேக் நடித்த ’தாராள பிரபு’ என்ற படத்திற்கு விருது கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பாக நடித்த விவேக் அவர்களுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருது கிடைத்த நிலையில் அந்த விருதை நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் சென்னை திரும்பியதும் அவர் நேராக விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விருதை ஒப்படைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை அடுத்து விவேக்கின் டுவிட்டர் பக்கத்தில் அவரது மகள் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டில் எனது தந்தை அவர்களுக்கு கிடைத்த விருதை யோகி பாபு அண்ணா பெற்று அதை கொண்டு வந்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றும் தாராள பிரபு படக்குழுவினருக்கும் நன்றி என்றும் இந்த விருது அளித்த சிமா விருது குழுவினருக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்த பின்னர் அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவிதமான டுவிட்டுக்களும் பதிவு செய்யப்படாத நிலையில் அவரது மகள் பதிவு செய்த இந்த முதல் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விவேக்கின் டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து ஆக்டிவ்வாக வைத்து இருங்கள் என்றும் அவர் இறந்தது தெரியாமல் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற உணர்வு அவரது டுவிட்டர் பக்கத்தில் பார்க்கும்போது ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version