சினிமா செய்திகள்

விஸ்வாசம் ரிலீஸும் ரசிகர்கள் களேபரமும்!

Published

on

விஸ்வாசம் படம் இன்று உலகமுழுவதும் ரிலீசாகி திருவிழா கொண்டாட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கே படம் ரிலீசான நிலையில், ரசிகர்கள் தியேட்டர்களில் கட்டவுட் வைப்பது பாலாபிசேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது பட்டாசு வெடிப்பது என பல அலப்பறைகளை செய்தனர். இதில், சில கலவரங்களும் நடந்துள்ளன.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்த அஜித்குமார் என்ற பெயருடைய இளைஞன், விஸ்வாசம் படத்துக்கு போக தந்தை பாண்டியன் காசு தராத கோபத்தால், தந்தையின் தலையில் தீயிட்டு கொழுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாண்டியன் தற்போது மருத்துவமனையில், அஜித்குமார் லாக்கப்பிலும் உள்ளனர்.

சினிமா மோகம் இளைய தலைமுறையை இப்படி சீரழித்து வருகிறதே என்ற வருத்தும் எழுந்துள்ளது.

மேலும், திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் கத்திக் குத்து சம்பவங்கள் நடந்து இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒருபுறம் இருக்க, கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தபோது, கட்டவுட் கழண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அஜித் ரசிகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்த்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் இப்படி செய்துள்ளதை அறிந்த தியேட்டர் ஓனர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version