சினிமா செய்திகள்

‘யாரு நம்பிக்கை துரோகம் பண்ணாங்கன்னு சீக்கிரம் தெரியும்’- சூரி விவகாரத்தில் விஷ்னு விஷால் காட்டம்..!

Published

on

நடிகர் சூரி மற்றும் நடிகர் விஷ்னு விஷால் இடையே நிலவி வரும் மோதல் கடுமையாகும் வகையில் விஷ்னு விஷால் சில விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷ்னு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி நில மோசடி வழக்குப் பதிந்திருந்தார். இந்த விவகாரத்தின் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து பல படங்களில் ஒன்றாக நடித்து வந்த சூரி- விஷ்னு விஷாலின் நட்பு தேய்ந்து போனது. இதுகுறித்து விஷ்னு விஷாலின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ‘சூரி விவகாரத்துக்குப் பின் உங்களை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த நடிகர் விஷ்னு விஷால், “உண்மை வெளிச்சத்துக்குக் வரும் போது தெரியும். யாரு யாரை ஏமாத்துனாங்கனு சீக்கிரம் தெரியும். யாரு நம்பிக்கை துரோகம் பண்ணாங்கன்னு சீக்கிரமே வெளியே வரும். அதுக்கு அப்றம் யாரை விரும்பலாம் யாரை வெறுக்கலாம் என நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். என் ரசிகர்களை நான் கைவிடமாட்டேன்” என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version