சினிமா செய்திகள்

சூரி தான் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.. விஷ்ணு விஷால்!

Published

on

நடிகர் சூரி தன் மீதும், தனது தந்தை மீதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வீர தீர சூரன் படத்தில் சூரி நடிக்க ரூ.40 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை தராமல் தயாரிப்பு தரப்பு இழுத்து வந்துள்ளது. பின்னர் 2.30 கோடி ரூபாய் கொடுத்தால் 3 கோடி ரூபாய் மதிப்பாலான சொத்தை சூரிக்குப் பெயர் மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.

அந்த தொகையைச் சூரி செலுத்திய பிறகும், அந்த சொத்தை சூரியின் பெயரில் மாற்றித் தராமல் இழுத்து வந்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாகப் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நிலை மோசடி பிரிவு கீழ் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சூரியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், ‘சூரி தன் மீதும், தனது தந்தை மிதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. 2017-ம் ஆண்டு கவரிமான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சூரிக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் சில காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. அதை சூரி தான் திருப்பி வழக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version