சினிமா செய்திகள்
விருமாண்டியின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்?
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்று பேருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் என்றும் அவர்களுடைய பெயர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படமும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமார் தியேட்டர் ஆபரேட்டர் ஆக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முதல் படத்தையும் போலவே இயக்குனர் விருமாண்டி இந்த படத்தையும் வெற்றிப்படமாக தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.