தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் பலி!

Published

on

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பாலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100-க் கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலைகள் போலவே வெடி விபத்துக்கும் இங்கு பஞ்சமில்லை. வெடி விபத்தை தவிர்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களைக் குறைக்க முடியவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சாத்தூர் அருகில் உள்ள அச்சம்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் பலத்த சத்தத்துடனான வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து பகுதிக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், வெடி விபத்து எப்படி நடந்தது போன்ற ஆய்வை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Trending

Exit mobile version