தமிழ்நாடு

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளிகள் திறக்கப்படாது: அதிரடி அறிவிப்பு

Published

on

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படும் என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நேரடி முறையில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. 50 விழுக்காடு மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது தமிழகம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன

இந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மேகநாத ரெட்டி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவல் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் எங்கேயாவது தடுப்பூசி போடவில்லை என்றால் அந்தப் பள்ளி திறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரம் இருக்கக் கூடிய நிலையில் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாநிலம் முழுவதும் ஒரே வகையான விதிமுறைகள் இல்லாதது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள் வெளியாகி வருகின்றன என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் விதிமுறைகளை மாற்றி மாற்றி அறிவித்து வருகின்றனர் என்றும், இதனால் எந்த விதிமுறைகளை பின்பற்றுவது என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த குழப்பங்களை போக்கும் வகையில் மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான கொரோனா தடுப்பு விதிமுறைகளை கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version