கிரிக்கெட்

ஐசிசி விருதில் உலக சாதனை படைத்த விராட் கோலி: அரிய பெருமை!

Published

on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஆண்டுதோறும் விருதுகளை அறிவிக்கும். அதில் வழங்கப்படும் மூன்று முக்கியமான விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது, ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது, ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது என மிக முக்கியமான மூன்று விருதுகளையும் விராட் கோலி கைப்பற்றியுள்ளார். இந்த மூன்று விருதுகளையும் ஒரே ஆண்டில் பெற்ற முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் யாருமே இப்படி இந்த மூன்று விருதுகளையும் ஒரே ஆண்டில் பெற்றதில்லை. அதுமட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டில் சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் அணிகளுக்குமான கேப்டனாகவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version