கிரிக்கெட்

கோலிக்கு பந்து வீசுவதுதான் சிரமம்: தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ரபாடா புகழாரம்!

Published

on

மற்ற எல்லா நாட்டு வீரர்களையும் விட இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசவே தான் அதிக சிரமப்பட்டதாக தென்னாப்பிரக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

தென் ஆப்பிரக்க அணியில் ககிசோ ரபாடா மிக முக்கியமான வீரர். தனது புயல்வேக துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர் இவர். டேல் ஸ்டெயினுக்கு பிறகு ரபாடா தென் ஆப்பிரிக்காவின் மிரட்டல் பந்துவீச்சாளராக அறியப்படுகிறார்.

ஆப்பிரிக்காவில் தற்போது நடந்துவரும் ம்ஸான்சி டி20 போட்டிகளில் விளையாடி வரும் ரபாடா தனது ஊடக பேட்டி ஒன்றில் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராகப் பந்து வீசுவதுதான் கடினமாக இருந்துள்ளது. அவர்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளார். மற்ற எந்த நாட்டு வீரர்களையும்விட கோலியை எதிர்கொள்வதே சிரமம் என கூறியுள்ளார் ரபாடா.

seithichurul

Trending

Exit mobile version