கிரிக்கெட்
தென்னாப்பிரிக்க அணியுடன் தோல்வி… விராட் கோலி எடுத்த அதிர்ச்சி முடிவு….
சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் விளையாடிய பல போட்டிகள் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் விராட் கோலி. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறி விட்டது. இதையடுத்து விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஏற்கனவே, 20 ஓவர், ஒரு நாள் கிரிக்கெட் அணிகள் ஆகியவற்றின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது.