Connect with us

கிரிக்கெட்

“Depressionல திக்கு முக்காடிட்டேன்!”- தன் வாழ்க்கையின் சோகப் பக்கம் பற்றி முதன்முறையாக மனம் திறந்த கோலி

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தான் மனச்சோர்வில் உழன்ற காலம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸுடன் நேர்காணலின் போது, இது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் கோலி. 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் தொடர்களை விளையாடியது. அந்த தொடரில் கோலியின் பேட்டிங் மிகவும் சொதப்பலாக அமைந்தது. அப்போது தான், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய டிப்ரஷனை கோலி அனுபவித்ததாக சொல்கிறார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், ‘2014 இங்கிலாந்து தொடர் என்பதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அப்போது என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்ன செய்து ரன்கள் அடிக்க வேண்டும் என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகின் மிகத் தனிமையான மனிதன் நான் தான் என்று அப்போது உணர்ந்தேன்’ என்றுள்ளார்.

2014 இங்கிலாந்து தொடரில், 5 டெஸ்ட் போட்டியில் விளையாடிய கோலி 10 இன்னிங்ஸில், 1, 8, 25, 0, 39, 28, 0,7, 6 மற்றும் 20 ஆகிய ரன்களை எடுத்தார். அந்த தொடரில் அவரது பேட்டிங் சராசரி 13.40 ஆகும். இதனால் இந்திய அணியில் இருந்து அவர் விலக்கப்படுவார் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்ததாக நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் 692 ரன்கள் அடித்துச் சாதனைப் படைத்தார்.

‘அந்தத் தொடரின் போது தான், நிறைய அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கும் போதிலும், தனிமை என்பது வரும் என உணர்ந்தேன். எனக்கு அப்போது தேவைப்பட்டது தனிப்பட்ட வகையிலான அன்பு அல்ல. தொழில் ரீதியிலான ஆதரவு மட்டுமே’ என்று மேலும் தன் 2014 நிலை குறித்து விவரிக்கிறார் கோலி.

அவர் மேலும், ‘உள ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியம். விளையாட்டு வீரருக்கும் அது மிகவும் முக்கியமானது ஆகும். அது பல மாதங்களுக்குத் தொடர்ந்தால் ஒருவரின் வாழ்க்கையையே அழித்து விடும்’ என்று அட்வைஸுடன் முடித்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!