கிரிக்கெட்

மனைவி- குழந்தை க்யூட் படத்தைப் பகிர்ந்து பெண்கள் தின வாழ்த்து சொன்ன விராட் கோலி!

Published

on

மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்துடன், இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்கள் ஒரு சிறிய பிரேக்கில் உள்ளனர்.

இந்நிலையில் கோலி, பெண்கள் தினமான இன்று தன் மனைவியும் நடிகையும் அனுஷ்கா சர்மா மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் பிறந்த தன் பெண் குழந்தை வாமிகாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘ஒரு குழந்தை பிறப்பதைப் பார்ப்பது தான் மனிதனாக பிறந்தவர்களுக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த அனுபமாக இருக்கும். அதைப் பார்த்த பின்னர் பெண்களின் உண்மை வலிமையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். அவர்கள் ஆண்களைவிட மிக வலிமை மிக்கவர்கள் என்பதை உணர முடியும். என் வாழ்க்கையின் மிகச் சிறந்த, வலிமை மிக்க பெண்ணுக்கும், அவள் அன்னையைப் போலவே வளரப் போகும் பெண்ணுக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். உலகில் உள்ள அத்தனை பெண்களுக்கும் வாழ்த்துகள்’ என்று க்யூட்டாக கூறியுள்ளார்.

Trending

Exit mobile version