கிரிக்கெட்

INDvENG- மந்தமாக ஃபீல்டிங் செய்த ஷ்ராதுல் தாக்கூர்; நடுமைதானத்தில் கத்திய கோலி! #Video

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து, 2 – 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஷ்ராதுல் தாக்கூரின் சொதப்பலான ஃபீல்டிங்கால் கடுப்பாட கேப்டன் விராட் கோலி, நடு மைதானத்தில் அவரைக் கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 77 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கைர 18.2 ஓவர்களில் அடைந்தது. 

ரன் சேஸின் போது, 12வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, வலது பக்கம் பந்தைத் தட்டியுள்ளார். அதை மெதுவாக ஓடி வந்து எடுத்தார் தாக்கூர். இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்கள் ஓடிவிட்டனர். இந்த சொதப்பலான ஃபீல்டிங்கால் கோலி, தாக்கூரை கோபத்துடன் திட்டினார். தாக்கூர், என்ன நடந்தது என்பது குறித்து விளக்க முயன்றபோது கோலி, இன்னும் கடுப்பாகி திட்டினார். இது குறித்தான காணொலிக் காட்சி இதோ:

இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா, தொடரைக் கைப்பற்ற முடியும் என்கிற நிலை உள்ளது. 

Trending

Exit mobile version