கிரிக்கெட்

தோல்விக்கு பின் விரக்தியுடன் பேட்டியளித்த விராத்கோஹ்லி!

Published

on

நேற்றைய உலகக்கோப்பை டி20 போட்டியில் நாங்கள் தைரியமாக ஆடவில்லை என தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று கூறலாம்

இந்த நிலையில் நேற்றைய தோல்விக்கு பின் விராட் கோஹ்லி பேட்டி அளித்தபோது உண்மையை கூற வேண்டும் என்றால் நாங்கள் தைரியத்துடன் ஆடவில்லை. பேட்டிங் பவுலிங்கில் ஆரம்பத்தில் இருந்தே எங்களது உடல்மொழியில் தைரியமில்லை

பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்று ஆடிய போதெல்லாம் விக்கெட்டை இழந்துவிட்டோம். டி20 கிரிக்கெட் போட்டியில் இவ்வாறு நடப்பது சகஜம்தான் என்றாலும் தயக்கத்துடன் ஆடியதால் விக்கெட்டை இழந்தோம்.

டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை நம்பிக்கையுடன் அடித்து ஆட வேண்டும், ரன்ரேட் கணக்குகள் செய்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ஆனால் அதனை நாங்கள் செய்ய தவறிவிட்டோம். இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் கவனத்துடன் ஆடுவோம் என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version