கிரிக்கெட்

INDvENG – ஃபுல் பார்மில் சென்னையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் கோலி

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை மறுநாள் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு நாட்டு வீரர்களும் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். நேற்று முன் தினம் முதல் இந்திய வீரர்கள், தங்களது வலைப் பயிற்சியை ஆரம்பித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதைத் தொடர்ந்து பெரும் உத்வேகத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக களம் காண உள்ளது இந்திய அணி.

இந்நிலையில் கேப்டன் கோலி, தான் சென்னையில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவைப் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘உங்கள் தலைமை கீழே வைத்து தொடர்ந்து பணி செய்து கொண்டே இருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version