இந்தியா

விராட் கோலிக்கு ரூ.500 அபராதம்: அடுத்தமுறை 1000 என அதிகாரிகள் எச்சரிக்கை!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீரை கொண்டு கழுவியதால் அவருக்கு நகராட்சி அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

விராட் கோலியின் வீடு டெல்லி, ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமான கார்களை கழுவி சுத்தம் செய்ய அந்த பகுதிக்கு பயன்படுத்தும் குடிநீரை அவரது உதவியாளர் பயன்படுத்தியுள்ளார். இதனை பார்த்த விராட் கோலியின் பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் இது தொடர்பாக நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்து குடிநீரை கார் கழுவுவதற்கு உபயோகித்ததை உறுதி செய்த அதிகாரிகள் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுமாதிரி குடிநீரை வீணாக்கினால் நகராட்சி விதிகளின்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Trending

Exit mobile version