சினிமா செய்திகள்

சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராத் கோஹ்லி

Published

on

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராத் கோலி நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஐபிஎல் பெங்களூரு அணியின் வீரரான மேக்ஸ்வெல் மற்றும் சென்னை பெண் வினி ராமன் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதனை அடுத்து பெங்களூர் அணி வீரர்களுக்கு விருந்து அளிக்க மேக்ஸ்வெல் முடிவு செய்தார் .

இந்த விருந்தில் விராட் கோலி தனது மனைவியுடன் கலந்து கொண்ட நிலையில் மேலும் பலரும் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது வீரர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் இருந்தபோது திடீரென ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு விராட் கோலி நடனமாடினார் அவருடன் சேர்ந்து சக வீரர்களும் நடனமாடினார் .

அதேபோல ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கும் விராட் கோலி தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Trending

Exit mobile version