விளையாட்டு

குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா… மகிழ்ச்சியில் விராட் கோலி- அனுஷ்கா தம்பதியர்..!

Published

on

விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியர் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைத்து ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஆகிய இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. 2020 ஆகஸ்ட்-ல் இந்தத் தம்பதி தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி விருஷ்கா தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டு விழா நடத்தி பெயரையும் அறிவித்துள்ளனர் விருஷ்கா தம்பதியினர். தங்களது குழந்தைக்கு வாமிகா எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த அறிவிப்பை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மும்பை புகைப்படக் கலைஞர்களுக்கு விருஷ்கா தம்பதி ஒரு வேண்டுகோள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த வேண்டுகோள் அறிக்கையில், “உங்களுக்குத் தேவையான கன்டென்ட்-களை நாங்கள் இருவரும் தந்து கொண்டே தான் இருக்கிறோம். எங்களது குழந்தையின் புகைப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். எங்களுக்கான ப்ரைவஸியையும் நீங்கள் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version