வைரல் செய்திகள்

விராட்- அனுஷ்கா தம்பதியருக்கு பெண் குழந்தை… உற்சாகத்தில் ரசிகர்கள்

Published

on

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி என்னும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். இன்று மதியம் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விராட் கோலி இன்று மாலை வெளியிட்டுள்ளார். மேலும், தாயும் குழந்தையும் மிகவும் நலம் உடன் இருப்பதாகவே கோலி தெரிவித்துள்ளார்.

கூடுதலாக தங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மதிக்க வேண்டும் என்றும் கோலி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். விராட் கோலி- அனுஷ்கா தம்பதியர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் தத்தமது துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version