கிரிக்கெட்

IPL – வாஷிங்டன் சுந்தரின் கழுத்தைப் பிடித்த நடராஜன்; அடுத்த என்ன நடந்தது..?

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை வெறும் 7 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் கடைசி பந்திலேயே முடிவு செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது ஐபிஎல். 

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பயோ பபுள் சூழலில் மிகவும் பாதுகாப்பான முறையில் தொடர் நடந்து வருகிறது. அதே நேரத்தில் வீரர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தினர் வீரர்களுடன் அதே பயோ பபுள் சூழலில் தங்கி தொடர்ந்து பயிற்சி எடுத்து ஆட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்கள். 

என்னதான் வெளியில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், ஐபிஎல் தொடர் சீராக நடந்து வருகிறது. சென்ற முறை ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே சீசனில் அதிக யார்க்கர்கள் வீசியவர் என்கிற பெருமையைப் பெற்று புகழின் உச்சத்துக்கே சென்றார் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் சிறப்பான ஆல்-ரவண்டராக திகழ்ந்தவர் வாஷிங்டன் சுந்தர். 

தற்போது இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடராஜன், வாஷிங்டன் சுந்தரின் கழுத்தை நெரிக்க வருவது போல உள்ளது அந்தப் படம். அந்தப் படத்தைப் பகிர்ந்த சுந்தர், ‘எஞ்சாமி நடராஜன்’ எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு நடராஜன், ஸ்மைலிகளை தெறிக்க விட்டுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version