கிரிக்கெட்

INDvENG – திடீரென்று மைதானத்துக்குள் ஓடி வந்த ரசிகர்; பதறியடித்துப் பின்வாங்கிய கோலி – வைரல் சம்பவம்!!!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கி ரசிகர் ஒருவர் ஓடி வந்துள்ளார். அவரைப் பார்த்து கோலி கொடுத்த ரியாக்‌ஷன், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து கோலி போட்ட பார்ட்னர்ஷிப்பால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதே நேரத்தில் 58 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த போது, ஜாக் லீச் பந்தில் விக்கெட் ஆனார் கோலி. இதற்கு முன்னர் தான் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி ஓடி வந்துள்ளார். அப்போது கோலி, பதறியடித்துப் பின் வாங்கிய ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகவும், மீம் கன்டென்டாகவும் மாறியுள்ளது.

கோலியின் ரியாக்‌ஷன் இதோ:

seithichurul

Trending

Exit mobile version