தமிழ்நாடு

இனி அடுப்புக்கு பெட்ரோலே தேவையில்ல… அதுவே குபுகுபுன்னு எரியப் போகுது- உளறிக் கொட்டிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

Published

on

இனி சமையல் அடுப்புகளுக்கு பெட்ரோல் தேவை இருக்காது என்று உளறிக் கொட்டியுள்ளார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவச சூரிய சக்தியால் இயங்கும் சமையல் அடுப்பு கொடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை விளக்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டினார். 

அவர், ‘சூரிய சக்தி அடுப்பு கொடுக்க அதிமுக அரசு திட்டம் வைத்துள்ளது. இந்த அடுப்பு வந்தவிட்டால் மின்சாரத் தேவை இருக்காது, அடுப்புக்கு பெட்ரோல் ஊற்ற வேண்டிய தேவையும் இருக்காது. சூரிய ஓளி மூலம் அடுப்பு தானாக எரியும். இது ஒரு அருமையான திட்டம்’ என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அவரின் இந்த உளறல் பேச்சு, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்தான காணொலியும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

Trending

Exit mobile version