இந்தியா

உ.பி-யில் நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்ட கும்பல்; மீம் கன்டென்டாக மாறிய வைரல் வீடியோ!

Published

on

உத்தர பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் குறித்தான காணொலி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தாலும், மறு பக்கம் அது ஒரு வைரல் மீம் கன்டென்டாக மாற்றப்பட்டு உள்ளது.

பாக்பத்தின் அதிதி பவன் சந்தைப் பகுதியில் கடை வைத்திருக்கும் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதம் சண்டையில் போய் முடிந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த இரு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் மோதலில் ஈடுபட, அது இரு கும்பலுக்கு இடையிலான மோதலாக மாறியது.

இந்த கொடூர சண்டை கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு நீடித்தது. இது குறித்தான காணொலி ட்விட்டர் தளத்தில் வெளியாகி படு வைரலானது.

மோதலில் ஈடுபட்ட 8 பேரை பாக்பத் காவல் துறை கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் யாருக்கும் மிக அதிகளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்தின் வைரல் வீடியோவும் அது குறித்தான கிண்டல்களும்:

author avatar
seithichurul

Trending

Exit mobile version