சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு- த்ரிஷா- கெளதம்- ரஹ்மான் காம்போ..!

Published

on

மீண்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயோ’ காம்போ சிம்பு- த்ரிஷா-கெளதம் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ புதிய படம் ஒன்றுக்காக இணைய உள்ளனர்.

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது. இதையடுத்து மாநாடு படமும் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளதாம். இதனால் அடுத்து பத்து தல படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார் எஸ்டிஆர். அடுத்ததாக சிம்பு கெளதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகி இருந்தது.

இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்ற செய்தியும் உறுதி செய்யப்பட்டது. இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகி ஆக நடிக்க முதலில் நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நயன்தாரா கண்டிப்பாக நடிப்பார் எனக் கூறப்பட்டு வந்த வேளையில் இந்தப் படத்தில் நாயகி ஆக கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா.

இதனால் மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ சிம்பு, த்ரிஷா, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் இணைகின்றனர். நிச்சயமாக இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், நிச்சயமாக இது விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட் 2 இல்லை என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

Trending

Exit mobile version