தமிழ்நாடு

பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம்!

Published

on

பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் என்பச்வர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின,

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று முதல் இந்த வழக்கை விசாரணை செய்ய தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாலியல் புகார் வெளிவந்ததை அடுத்து ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பதும் சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பதும் முன்னாள் சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version