சினிமா செய்திகள்

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த விஜய் பட வில்லன் நடிகர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

விஜய் நடித்த ’வேலாயுதம்’ ’தலைவா’, விக்ரம் நடித்த ’பத்து எண்றதுக்குள்ள’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்த வில்லன் வேடத்தில் நடித்த அபிமன்யூ சிங், ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. ‘அண்ணாத்த’ படத்தில் ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வில்லன் நடிகரின் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் ஏற்கனவே வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளைஒ சிறுத்தை சிவா டீம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா மற்றும் குஷ்பூ நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version