சினிமா
விக்ரமின் ‘தங்கலான்’ ரிலீஸ்: சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குநர்!
நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் இரஞ்சித் அப்டேட் கொடுத்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் என பலரும் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியாவது குறித்து இயக்குநர் இரஞ்சித் பேசியுள்ளார். இயக்குநர் இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘வானம் கலைத் திருவிழா’ ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஒருபகுதியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, “”தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80% நிறைவடைந்துவிட்டது. குறிப்பாக, கோலார் தங்க சுரங்கத்தில் 55 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இந்த மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிடும் என நினைகிறேன். அந்தப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது அவ்வளது எளிதான காரியம் இல்லை. மிகவும் சவாலாக இருந்தது.
படத்தில் VFX வேலைகள் நிறைய இருக்கிறது. சுவாரஸ்யமான அதேசமயம் மக்களுக்குப் பிடித்த திரைப்படமாகவும் இது இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கலான்' வெளியாகும். மேலும், கமல் சார் படத்திற்கும் திரைக்கதை எழுதி இருக்கிறேன். இதுமட்டுமல்லாது,
சார்பட்டா பரம்பரை2′ திரைக்கதை பணிகளும் உள்ளது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இருப்பாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வாய்ப்பிருந்தால் நிச்சயம் இணைந்து பணியாற்றுவோம்” எனப் பேசியுள்ளார்.