சினிமா செய்திகள்

‘கர்ணன்’ பார்த்த மெய்சிலிர்த்த சியான் விக்ரம்; அடுத்த அவர் செய்த காரியத்தைப் பாருங்க!

Published

on

தனுஷ் நடிப்பில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘கர்ணன்’ திரைப்படம்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ‘கர்ணன்’. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பிரச்சனை பற்றிய பதிவாக அமைந்துள்ள கர்ணன் திரைப்படத்திற்கு தமிழக அளவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸான ஒரு சில நாட்களில் கர்ணன், சுமார் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. கொடியன்குளத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கர்ணன் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ‘சியான்’ விக்ரம், தியேட்டரில் நேரில் சென்று பார்த்துள்ளார். அவருக்குப் படம் மிகவும் பிடித்து விடவே, இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சென்று பார்த்து அவரைப் பாராட்டியுள்ளார். மேலும் இந்தச் சந்திப்பின் போது எடுத்துக் கொள்ளப்பட்ட திரைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version