சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் அடுத்தப் படம் அறிவிப்பு – யார் ஹீரோயின் தெரியுமா?

Published

on

சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பின்னர் ஒரு டஜன் படத்திற்கு மேல் விக்ரம் பிரபு நடித்து முடித்திருந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே ஹிட் கொடுத்தன. தொடர்ந்து பல ஃபிளாப் படங்களைக் கொடுத்து, தமிழ் சினிமாவில் தன் மார்க்கெட்டை இழந்துள்ளார் விக்ரம் பிரபு. அதே நேரத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நல்ல ரீச் ஆனது. நேரடியாக சன் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பட்டாலும், ஓடிடி தள ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. 

இப்படி ‘புலிக்குத்தி பாண்டி’ ஹிட் ஆனதால் குஷியில் இருக்கும் விக்ரம் பிரபு, அடுத்தடுத்துப் படங்களை ஓகே செய்து வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்தப் படத்திற்கு ’பகையே காத்திரு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிவேல் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ராசி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending

Exit mobile version