சினிமா செய்திகள்

தேர்தலுக்காக சீக்கிரம் முடித்தோம்: வாணிபோஜன் படம் குறித்து விக்ரம்பிரபு

Published

on

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் புகழ் பெற்று தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் உடன் நடிகர் விக்ரம் பிரபு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பாயுமொளி நீ எனக்கு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சவுத்ரி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தை திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே படக்குழுவினர் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்

இவ்வளவு விரைவாக இந்த படத்தை முடித்ததற்கு தேர்தலில் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று தான் என நடிகர் விக்ரம் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:

எனது இனிய ரசிக பெருமக்களே, வணக்கம். தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா அவர்களின் பட நிறுவனமான மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நானும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி அவர்கள் இயக்கத்தில் கடந்த 55 நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்து வந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம். இவ்வளவு விரைவாக முடிந்ததின் நோக்கமே அனைவரும் தங்களின் ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஏப்ரல் 6 (நாளைய தினம்) நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version