தமிழ்நாடு
மருத்துவமனையில் இருந்து விஜய்காந்த் வீடு திரும்பினார்.. மீண்டும் வாருங்கள் கேப்டன்!
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.
அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தது. நேற்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொண்டர்கள் இடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.