சினிமா செய்திகள்

’சர்வைவர்’ சாம்பியன் இந்த நடிகையா? ரூ.1 கோடி பரிசு!

Published

on

ஜீ தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சியில் தமிழ் நடிகை சாம்பியன் பட்டம் பெற்று ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையை பெற்றுள்ளார்.

கடந்த 90 நாட்களாக கடுமையான டாஸ்குகளுடன் நடைபெற்று வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை விஜயலட்சுமி வெற்றி பெற்று ரூபாய் ஒரு கோடி பரிசை வென்றார்.

’சர்வைவர்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு விஜயலட்சுமி நேரடியாக தகுதி பெற்றார் என்பதும் விஜயலட்சுமிக்கு ஒரு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது என்பதும் அந்த சலுகையின் அடிப்படையில் இன்னொரு இறுதி வேட்பாளரை தேர்வு செய்யுமாறு அர்ஜுன் கூறியதை அடுத்து அவர் வேனசாவை தேர்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மூன்றாவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்யும் போட்டியில் உமாபதி மற்றும் சரண் விளையாடிய நிலையில் சரண் வெற்றி பெற்றார். இதனை அடுத்து ஓட்டளிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டனர். ஓட்டளிக்கும் நபர்களால் அதிக ஓட்டு யாருக்கு கிடைக்கின்றதோ, அவரே இந்த ’சர்வைவர்’ சாம்பியன் என்று அர்ஜுன் தெரிவித்தார்.

இதையடுத்து விஜயலட்சுமி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வேனசாவுகு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பதும் சரணுக்கு 3 ஓட்டுக்கள் கிடைத்தது என்பதும், விஜயலட்சுமி 54 ஓட்டுகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜயலட்சுமிக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையும் சாம்பியன் பட்டமும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இதனை அடுத்து விஜயலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version